விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவர், தந்தை விஜயகுமாருக்கு சொந்தமான பங்களாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார். 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகும் வீட்டை காலி செய்யாமல் இருந்திருக்கிறார். இதனால், விஜயகுமார், அவரை காலி செய்ய சொன்னபோது, இந்த வீட்டில் தங்கியிருக்க எனக்கு உரிமை இருக்கிறது என்று கூறி ரகளை செய்தார். இது தொடர்பாக விஜயகுமார், மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரகளையில் ஈடுபட்ட வனிதாவின் நண்பர்களை கைது செய்தனர்.
போலீசார் தன்னை தாக்கியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வனிதா. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் போலீசிடமிருந்தும், தனது குடும்பத்தினரிடம் இருந்தும் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்ததது.
இதனை விசாரித்த கோர்ட், இதுகுறித்து சென்னை ஐகோர்ட் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வனிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.