ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் அமலாபால் அறிமுகமாகும்போது அப்பாவி பொண்ணு. ஆரம்பத்தில் அவர் நடித்த படங்களும் அப்படித்தான் இருந்தது. சிறு பட்ஜெட் படங்களின் சாதாரண நாயகியாக இருந்த அமலா பாலை, இயக்குனர் ஏ.எல்.விஜய், தெய்வதிருமகள் படத்தில் உயரத்துக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு விஜய்யுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். வளர்த்துவிட்ட விஜய்யை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்தும் செய்து விட்டார்.
அந்தப் படத்தில் கையில் கள்ளு பாட்டிலுடன் லுங்கியை மடித்து கட்டியபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்துடன் "நான் இப்போது லுங்கிக்கு பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி கள்ளும் குடிக்கிறார்கள். இன்று நன்றாக குடிக்கலாம், மீன் சாப்பிடலாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் வாங்க" என்று குறிப்பிட்டிருக்கிறார்.