மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஐதராபாத்தில், கச்சிபௌலி என்ற இடத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற 7 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டரை இன்று(டிச., 2) திறந்துள்ளார். ஆசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் முதலீடு செய்திருக்கிறார் மகேஷ்பாபு.
மாலை முதல் அங்கு படங்கள் திரையிடப்பட்டன. 2.0 படத்தின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. தியேட்டரை பல திரைப்பிரபலங்கள் சில நாட்கள் முன்னதாகவே பார்வையிட்டு பாராட்டி உள்ளார்கள்.
தியேட்டரின் திறப்பு விழா தெலுங்குத் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. மொத்த நிகழ்வையும் தன்னுடைய யு டியூப் சேனலில் இடம் பெற வைத்துள்ளார் மகேஷ் பாபு.
7 தியேட்டர்களில் 1600 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதியும், 3டி திரையிடல், டால்பி அட்மாஸ்பியர் ஒலி அமைப்பு என சர்வதேச தரத்தில் தியேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வசதியாக கோல்டு டிக்கெட் கட்டணத்தை 200 ரூபாயும், பிளாட்டினம் டிக்கெட் கட்டணம் 300 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
ஐதராபாத்தின் புதிய அடையாளமாக இனி எஎம்பி சினிமாஸும் இருக்கும் என தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.