துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகரானவர் ரஜினிகாந்த், தற்போது 2.ஓ வரை அவர் 162 படங்களில் நடித்து விட்டார். அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 163வது படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி அளித்த ஒரு பேட்டியில், நான் எனது வாழ்வாதாரத்திற்காகத்தான் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதன்பின் எனது வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்தேன். இப்போது நான் அதை அனுபவித்து வருகிறேன். எல்லாமே நாடகம் என்பது தான் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம்.
மேலும், நடிப்பை பொழுதுபோக்காகத்தான் நினைக்கிறேன். தொழிலாக நினைக்கவில்லை. காரணம், நடிப்பை தொழிலாக நினைத்தால் அது நமக்கு சுமையாகி விடும். அதனால் நடிப்பை எப்போதுமே ஒரு விளையாட்டாக பொழுதுபோக்காக மட்டுமே நான் செய்து வருகிறேன். விளையாட்டாக எதிர்கொள்ளும்போதுதான் எனக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறது.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அரசியல் என்பது மிகப் பெரிய விளையாட்டு. ஆனால் மிகவும் ஆபத்தானது. அதனால் மிக கவனமாக, நிதானமாக விளையாடி வருகிறேன். அரசியலுக்கு வந்த பிறகும் படங்களில் நடிப்பீர்களா என பலரும் கேட்கிறார்கள். நிச்சயம் நடிப்பேன். என் உடலில் தெம்பு இருக்கும் வரை படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.