'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தன்னைவிட 10 வயது குறைந்த ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு நிஜ அரண்மனையில் மன்னர் காலத்து திருமணம் போன்று தனது திருமணத்தை நடத்த ஆசைப்பட்டார் பிரியங்கா.
இதற்காக ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை புக் செய்யப்பட்டது. இதன் 2 நாள் வாடகை 2 கோடி என்கிறார்கள். திருமணத்திற்காக நிக் ஜோன்ஸ் குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்தியா வந்து விட்டனர். இந்தியாவை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று ஜோத்பூர் அரண்மனை வந்து விட்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் பிரியங்கா.
நிக் ஜோன்ஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரியங்கா இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. மணமக்கள் இருவருக்கு பாதிரியார் திருமணத்தை நடத்தி வைத்தார். இருவரும் மோதிரம் மாற்றி, முத்தமிட்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இன்று காலை இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
நேற்று நடந்த திருமண விழாவில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார், இவர்கள் தவிர சோப்ரா குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்தையட்டி அரண்மணையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. செல்போன்கள், கேமராக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.