இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல குணசித்ர மற்றம் வில்லன் நடிகர் ராதாரவி. முன்னாள் நடிகர் சங்க செயலாளர். தற்போது டப்பிங் யூனியன் தலைவராக உள்ளார். இவர் சமீபகாலமாக தன் பெயருக்கு முன்னால் டத்தோ என்ற பட்டத்தை போட்டுக் கொள்கிறார். திரைப்படங்களின் டைட்டில் கார்டிலும் அப்படித்தான் போடுகிறார்கள். டத்தோ பட்டம் மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு கவுரவமாகும்.
ஆனால் இந்த டத்தோ பட்டம் போலியானது என்று பாடகி சின்மயி சர்ச்சையை கிளப்பி உள்ளார். ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கியது உண்மையா என்று கேட்டு மலேசிய அரசுக்கு சின்மயி மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்திற்கு மலேசிய அரசின் சார்பில் மெலாகா முதல்வரின் பொது விவகாரத்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் குமார் பிரகாசம் அனுப்பி உள்ள பதிலை, தனது டுவிட்டரில் சின்மயி வெளியிட்டிருக்கிறார். அந்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:
சின்மயி, நான் ஏற்கெனவே, மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனெனில் ராதாரவி இந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். மெலாகா அரசின் முதல்வர் யாக் தவுன் ஹாஜி அடி பின்னிடம் இது குறித்து புகார் தெரிவித்து இதன் மீது நடவடிக்கையோ அல்லது தீர்வோ எட்டப்படும். இதைப் பற்றி எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.