மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இன்றைக்கு சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக பிறந்து, வசதியான வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை என வளர்ந்தவர்கள் கிடையாது. ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து, சினிமாவில் உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். தான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் என கூறியுள்ளார்.
டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது : "கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான். இரு வேளை உண்டால் அரிது. அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்" என கூறியுள்ளார்.