'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி, அக்சய் இணைந்து நடித்து வெளியாகியுள்ள '2.0' படத்தில் அமைச்சராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் கலாபவன் சாஜன். 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை அடித்து உதைக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாக இவரது அசத்தலான நடிப்பை பார்த்துதான் இந்த கேரக்டருக்கு கலாபவன் சாஜனை தேர்ந்தெடுத்தாராம் ஷங்கர்.
அதுமட்டுமல்ல, 2.0 படத்தின் படபிடிப்பு தேதிகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பை அவப்போது மாற்றி வைத்து நடத்தியுள்ளார் ஷங்கர். அந்தசமயத்தில் கலாபவன் சாஜன் மலையாளத்தில் பிசியாக இருந்ததால் அவரால் தேதிகள் ஒதுக்க முடியாமல் போனது.
ஆனாலும் கலாபவன் சாஜனுக்கு பதிலாக வேறு ஒரு நபரை மாற்றி நடிக்க வைக்காமல், அவர் தான் நடிக்க வேண்டும் என அவருக்காக சில நாட்கள் காத்திருந்து படப்பிடிப்பை ஷங்கர் நடத்தினார் என கலாபவன் சாஜனே சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.