இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் ரியாமிகா. சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் தம்பி பிரகாசுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூங்கச் சென்றவர் காலை நெடுநேரம் ஆகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த தம்பி பிரகாஷ் கதவை பலமாக தட்டியுள்ளார். அப்படியும் திறக்காதால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. ரியாமிகா சினிமாவில் பெரிய கனவுகளோடு இருந்தார் என்றும், ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.