டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தபோது இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப்போனார் சூர்யா.
தற்போது மீண்டும் 'என்.ஜி.கே' படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க ஆயுத்தமாகி வருகின்றனர். அதுதான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம் என்றும் செல்வராகவன் தரப்பில் தயாரிப்பாளருக்கு உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் அவ்வப்போது, என்.ஜி.கே அப்டேட் என்ன என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வந்தார்கள். அதற்கு சரியான பதில் கிடைக்காததினால் மீம்ஸ்கள் தயார் செய்து வெளியிட்டார்கள். இதெல்லாம் இயக்குநர் செல்வராகவனை கடுப்பேற்றிவிட்டது.
“நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.