'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி சலீம் படத்தின் மூலம் நடிகராக மாறினார். சலீம் படம் தொடங்கி 'திமிரு புடிச்சவன்' படம் வரை தான் நடித்த படங்களை தன்னுடைய பேனரிலேயே தயாரித்து வந்தார். படத்தை எடுத்து முடித்த பிறகு தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமத்தை மொத்தமாக யாராவது ஒரு விநியோகஸ்தரிடம் விற்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த பாணியில் படம் தயாரித்ததால் லாபம் பார்த்தார். இந்நிலையில் சமீபத்திய அவரது படங்கள் சரிவர போகவில்லை. இதனால் பல படங்களில் நஷ்டம் ஏற்பட்டது. விஜய் ஆண்டனி தயாரிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திமிரு புடிச்சவன் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் நஷ்டம் ஏற்பட்டதால் அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இனி எந்த படத் தயாரிப்பு வேலைகளிலும், இசை அமைப்பு பணிகளிலும் ஈடுபடப் போவதில்லை என்றும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன் என்றும் சமீபத்தில் உறுதிபட கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து விஜய் ஆண்டனி நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நான்கு படங்களையும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள்.