ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. ரஹ்மான் இசையமைப்பில், லைகா தயாரிப்பில் ரூ.550 கோடி பட்ஜெட்டில், 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இப்படம், ஹாலிவுட் தரத்திற்கு, இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற பெருமையோடு இன்று(நவ.,29ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸாகி உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை மற்றும் நள்ளிரவு சிறப்புகாட்சிகள் நடைபெறும். சமீபகாலமாக அது குறைந்துள்ளது. 2.0 படத்திற்கும் ஆரம்பத்தில் சிறப்பு காட்சி அனுமதிக்கபடாத நிலையில், சென்னையில் காசி டாக்கீஸில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
தென் சென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு காட்சியில் மாவட்ட செயலாளர் உட்பட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு படத்தை தீபாவளி போல கொண்டாடினர்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் படம் 8 மணிக்கு மேல் துவங்கியது. சில ஊர்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. இந்தியாவின் பெருமைமிகு படமாக வௌிவரும் 2.0, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹந்தி உள்ளிட்ட மொழிகளிலும், உலகமெங்கும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வௌியாகி உள்ளன.