டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக சமூகத்தில் பிரபலமானவர்கள் கூட தாங்கள் எவ்வாறெல்லாம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானோம் என்பதை 'மீ டூ' வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களின் இந்த துணிச்சல் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்தாலும் கூட, திரையுலகில் உள்ள சில நடிகைகளே இந்த 'மீ டூ' குற்றச்சாட்டுக்களை சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றனர்.
அதில் நடிகை பிரியாமணியும் ஒருவர். சமீபத்தில் இவர் மீ டூ பற்றி கூறும்போது, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது இது நல்ல நடைமுறைதான். பெண்கள் தங்கள் மீதான அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஒரு அருமையான பிளாட்பார்ம் கிடைத்துள்ளது.
என்றாலும், சிலர் மலிவான விளம்பரத்திற்காக இதை பயன்படுத்துகிறார்களோ என்கிற சந்தேகமும் எழவே செய்கிறது. ஒரு சில விஷயங்கள் அதை உறுதிப்படுத்தவும் செய்கின்றன” என கூறியுள்ளார்.
மேலும் தான் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் மட்டுமல்ல, சினிமா பெண்கள் நல அமைப்பிலும் கூட உறுப்பினராக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.