டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்புவுடன் குத்து படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என்று அழைக்கப்படுகிறவர் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா. சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே அரசியலில் இறங்கி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆனார்.
ரம்யாவை அரசியலுக்கு கொண்டு வந்ததில் மறைந்த நடிகர் அம்பரீஷூக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் அவரது இறுதி சடங்கில் ரம்யா பங்கேற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அம்பரீஷ் ரசிகர்கள், மாண்டியா மாவட்டம் முழுவதும் ரம்யாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்கள்.
இதனால் மிகவும் வருந்திய ரம்யா, தனது இன்ஸ்ட்ராகிராமில் தன் காலில் கட்டுப்போடப்பட்டுள்ள ஒரு படத்தை வெளியிட்டு, தனக்கு விநோதமான எலும்பு நோய் வந்திருப்பதாகவும், அதனால் நடக்ககூட சிரமம்படுவதாகவும், இதனை கவனிக்காமல் விட்டிருந்தால் புற்று நோயாக மாறியிருக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதோடு அம்பரீஷ் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அம்ரீஷ் மறைவு செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதும் என் மனதில் நீங்கா நினைவுகளாக இருப்பார். என்று கூறியுள்ளார்.