தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆமீர்கான், அமிதாப்பச்சன், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதால் பெரும் தோல்வியைத் தழுவியது.
தொடர்ந்து சிறப்பான படங்களைக் கொடுத்து வரும் ஆமீர்கான் எப்படி இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்றும் கேள்விகள் எழுந்தன. அவரும் அமிதாப்பச்சனும் முதல் முறை இணைந்த படம் இப்படி ஒரு தோல்வியைத் தழுவியதை பாலிவுட் எதிர்பார்க்கவில்லை. படத்தின் தோல்விக்குப் பிறகு இப்போதுதான் அதுபற்றி ஆமீர்கான் கூறியுள்ளார்.
“நாங்கள் தவறு செய்துவிட்டோம். அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் நல்லதொரு படத்தைக் கொடுக்க எங்களது கடின உழைப்பைக் கொடுத்தோம். ஏதோ ஒரு இடத்தில் அது தவறாகிவிட்டது. சிலருக்கு இந்தப் படம் பிடித்திருந்தது, அவர்களுக்கு எங்களது நன்றி. ஆனால், அவர்கள் மிகவும் குறைவான பேர்கள்தான். பெரும்பாலானவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.
எனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இந்த முறை அவர்களை நான் என்டெர்டெயின் செய்ய முடியவில்லை. மக்கள் தியேட்டர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகளுடன் வருகிறார்கள். அவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை,” என்று கூறியுள்ளார்.
வழக்கம் போல இந்தப் படம் சுனாவிலும் விரைவில் வெளியாக உள்ளது. முந்தைய ஆமீர்கான் படங்களைப் போல இந்தப் படம் அங்கு ஓடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.