‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஹிந்திப்படம் பிங்க். இதில், அமிதாப்பச்சன், டாப்ஸி, கிர்த்தி குல்ஹரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருதா ராய் சவுத்ரி இயக்கி இருந்தார்.
இந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்க இருப்பதாகவும், அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக போனி கபூரும், அஜித்தும் சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில், தற்போது பிங்க் படத்தின் கதையை எழுதியவர்களில் ஒருவரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சூஜித் சர்கார் அளித்துள்ள ஒரு பேட்டியில் "பிங் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் நடிக்கும் தமிழ் நடிகருக்கு ஏற்ப கதையில சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அவற்றை நான் மதிக்கிறேன். படத்தின் பணிகள் முடிந்ததும் என்னிடம் காட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். பிங்கை இயக்கிய அனிருத்தாவை நம்பியதைப்போல தமிழ் டீமையும் நம்புகிறேன், மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.