ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை : தியேட்டர்களுக்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த அரசாணையை, ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை என, சென்னை, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, தேவ ராஜன் தாக்கல் செய்த மனு : தியேட்டர்களில், டிக்கெட் கட்டணம் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து, ௨௦௧௭ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, தியேட்டர்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. தற்போது, ரஜினி நடிப்பில், ௨.௦, பேட்ட மற்றும் அஜித் நடிப்பில், விஸ்வாசம் படங்கள், விரைவில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், கூடுதல் காட்சிகள் திரையிடவும் கூடும். நிர்ணயித்த கட்டணத்துக்கு, கூடுதலாக வசூலிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. டிக்கெட் கட்டணம் தொடர்பான அரசாணையை, ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை; தியேட்டர்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவின் நடவடிக்கை என்ன என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, டிச., ௧௯க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.