அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
மாநகரம் உட்பட பல படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷனை வைத்து படம் எடுத்தால், அவரே அந்தப்படத்தின் தெலுங்கு உரிமத்தை வாங்கிக் கொள்கிறார். அதோடு அவரே கூடுதலாக பணம் கொடுத்து இரண்டு மொழிப்படமாக எடுக்கச் சொல்கிறார்.
'திருடன் போலீஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து சந்தீப் கிஷனை வைத்து கண்ணாடி என்ற படத்தை இயக்குகிறார். தமிழில் தொடங்கப்பட்ட இப்படம் இப்போது, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிப்படமாக மாறியிருக்கிறது.
தமிழில் 'கண்ணாடி' என்றும் தெலுங்கில் நின்னு வீடனி நீடனு நேனு ('Ninnu Veedani Needanu Nene) என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக, அன்யா சிங் நடிக்கிறார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், ஆனந்தராஜ், முரளி சர்மா, கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சைகோ த்ரில்லராக உருவாகும் 'கண்ணாடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தமிழில் உருவாகும் 'கண்ணாடி'யை வி.ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ சரவணபவ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தெலுங்கு படத்தை இரண்டு பட நிறுவனங்கள் உடன் இணைந்து சந்தீப் கிஷனும் தயாரிக்கிறார்.