டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டி நள்ளிரவில் போலீசிடம் பிடிபட்டார். அவருக்கு 3500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டிவிட்டு காரை மீட்டுச் சென்றார் காயத்ரி ரகுராம். சம்பவம் நடந்த அன்று இரவு நடந்தது என்ன என்பது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காயத்ரி ரகுமாம் வீக் எண்ட் பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு 11.30 மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பியிருக்கிறார். மது போதையிலேயே காயத்ரி ரகுராம் காரை ஓட்டி வந்தார். காரை நிதானம் இன்றி அங்கும், இங்கும் தத்தளித்தபடி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.
போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கையெழுத்து வாங்கிவிட்டு. ஒரு போலீஸ்காரை கார் ஓட்டச் சொன்னார்கள். அவர் காயத்ரியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரை காவல் நிலையத்தில் கொண்டு நிறுத்தி விட்டார். மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு சென்று ரூ.3,500 அபராதத்தை செலுத்தி விட்டு காரை எடுத்துச் சென்றார் காயத்ரி.