தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்திப்பட இயக்குனர் சுபாஷ் கய் மீது பாலிவுட் நடிகை கேத் சர்மா மீ டூ வில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் மும்பை அந்தேரி டி.என்.நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கேத் சர்மா தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க நான் நிறைய விலை கொடுக்க வேண்டியது இருக்கிறது. அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறார்கள். என் குடும்பத்தையும், உடல்நலமில்லாத என் தாயையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. வழக்கிற்காக நான் அலைவதை பார்த்து என் குடுமத்தினர் வருத்தப்படுகிறார்கள். போலீசாரின் விசாரணையிலும் திருப்தி இல்லை. வழக்கைதான் வாபஸ் பெற்றிருக்கிறேன். ஆனால் சுபாஷ் கய் மீது நான் கூறிய குற்றச்சாட்டு உண்மை. அது அப்படியேதான் இருக்கிறது. மீ டூவை மக்கள் கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள். இனி மீ டூவால் பெண்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்றே தெரிகிறது.
இவ்வாறு கேத் சர்மா கூறியுள்ளார்.