'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் செல்வராகவன்.
அவர் எடுத்து முடித்த நெஞ்சம் மறப்பதில்லை இன்னும் வெளியாகவில்லை. எடுத்துக் கொண்டிருந்த மன்னவன் வந்தானடி அப்படியே நின்றுவிட்டது. இருப்பினும் சூர்யா நாயகனாக நடிக்கும் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
இதனிடையே, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் தன் தாகம் என செல்வராகவன் கூறியுள்ளார். இது பற்றி டுவிட்டரில் , “வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் புதுப்பேட்டை 2 எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயினும் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்,” எனக் கூறியிருக்கிறார்.
ஆயிரத்தில் ஒருவன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வித்தியாசமான முயற்சி என பலராலும் பாராட்டப்பட்ட ஒரு படம்.