ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
சமீபகாலமாக பரபரப்பு கிளப்பி வரும் மீ டூ பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த மோகன்லால் "மீ டூ இப்போது பேஷனாகி விட்டது. முதலில் கொஞ்சம் பரபரப்பு கிளப்பி விட்டு பின்பு காணாமல் போகும்" என்று குறிப்பிட்டார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து நடிகை ரேவதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? பிரபலமான நடிகர் ஒருவர் மீ டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்லி இருக்கிறார். இயக்குனர் அஞ்சலி மேனன் சொன்னதுபோல் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாலியல் கொடுமைகள் பற்றியும் அதை வெளியில் சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் தெரியாது. இவ்வாறு ரேவதி குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோன்று பல நடிகைகள் மோகன்லாலின் கருத்துக்கு அவர் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.