ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
தயாரிப்பாளர் சங்கத்தில், புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஒதுக்கித் தரும் தேதிகளில் தான் உறுப்பினர்கள் படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அந்தக் குழுவின் அனுமதி இல்லாமலேயே சிலர் படங்களை வெளியிட்டு வந்தனர். விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்த 'திமிரு புடிச்சவன்' படம் அந்தக் குழுவின் அனுமதி பெறாமல் வெளிவந்தது. அந்தப்படம் அன்றைய தேதியில் வெளிவந்ததை எதிர்த்து, அதேதினத்தில் தனது 'உத்தரவு மகாராஜா' படத்தை வெளியிட்ட தயாரிப்பாளரும், நடிகருமான உதயா தயாரிப்பாளர் சங்க செயற் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குப்படுத்தும் குழுவின் அனுமதி பெறாமல் படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டதாம்.
அதனடிப்படையில் கடந்த வாரம் அனுமதி பெறாமல் படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி மீது 'ரெட்' தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.