Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் சங்கம் : உதயா, ஆர்.கே.சுரேஷ் விலகல், காரணம் என்ன ?

21 நவ, 2018 - 16:00 IST
எழுத்தின் அளவு:
RK-Suresh---Udhaya-resgin-from-Producers-council

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உதயா, ஆர்.கே.சுரேஷ் இருவரும் விலகியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் திடீரென பதவி விலகியது திரையுலக வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படம் தீபாவளிக்கும், உதயா நடித்த 'உத்தரவு மகாராஜா' படம் கடந்த வாரமும் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லாததால் படங்கள் குறிப்பிட்ட வசூலைக் கூட பெற முடியவில்லை. இருப்பினும் இருவருமே அவர்களது படங்களின் வெளியீட்டுப் பிரச்சினைக்கு தயாரிப்பாளர் சங்கம், அதிகமான தியேட்டர்களைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரித்ததில், அவர்கள் இருவருமே அவர்களது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாகச் சொல்கிறார்கள். தியேட்டர்களைப் பெற்றுத் தருவது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை அல்ல, இருப்பினும் சங்கத்தின் சார்பாக தியேட்டர்காரர்களிடம் பேசி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இருவருக்குமே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் நிதிப் பிரச்சினையில் தவித்த உதயாவிற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரையில் பேச்சு வார்த்தை மூலம் சரி செய்ய உதவியிருக்கிறார்கள்.

ஆனால், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தைக் குறை கூறுகிறார்கள் என்கிறார்கள். 'திமிரு புடிச்சவன்' படம் தயாரிப்பாளர் சங்க அனுமதி பெறாமல்தான் வெளியாகியிருக்கிறது. அந்த தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பேசப்பட்டு வருகிறது என்றும் சங்கத் தரப்பில் சொல்கிறார்கள். அந்தப் படத்தால்தான் உதயா அவருடைய 'உத்தரவு மகாராஜா' படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படம் 'சர்கார்' போட்டியில் சிக்கிக் கொண்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in