மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பாலிவுட் திரையுலகின் பல பிரபலங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவின் மெழுகுச்சிலையும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அனுஷ்கா சர்மாவின் இந்த மெழுகுச்சிலை அவர் செல்பி எடுப்பது போன்று அமைந்திருப்பது பலரையும் கவர்ந்து வருகிறது. அதனால் அந்த சிலையுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அனுஷ்கா சர்மாவே, தன் சிலையை பார்த்து வியந்து போனார்.
அனுஷ்கா சர்மா நடிப்பில் அடுத்தப்படியாக ஜீரோ படம் வெளியாக உள்ளது. இதில் ஷாரூக்கான் ஹீரோவாக, குள்ள மனிதராக நடித்திருக்கிறார்.