ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சைகள் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் விஜய்யின் சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள திமிரு புடிச்சவன் படமும் கதை திருட்டில் சிக்கி உள்ளது.
கிரைம் நாவல் மன்னன் என பெயரெடுத்த எழுத்தாளர் ராஜேஷ் குமார், திமிரு புடிச்சவன் பட கதை என்னுடையது என கூறியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது :
“கடந்தாண்டு, 'ஒன் + ஒன் = ஜீரோ' தொடர் கதையின் அடிப்படைக் கருவான, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை ப்ரைன் வாஷ் செய்து, தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது பற்றி எழுதி இருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பியடித்து 'திமிரு புடிச்சவன்' திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தப் பதிவுக்குக் கீழே, அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.