ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். அடுத்து, நரகாசூரன் படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா, இந்தரஜித் நடித்த இப்படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டபோதும், சில பிரச்னைகளால் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் அடுத்தப்படியாக நாடக மேடை படத்தை இயக்குவதாக கார்த்திக் நரேன் அறிவித்தார். இந்தப்படம் ஆரம்பமாகும் முன்னரே மற்றொரு படத்தை இயக்க உள்ளார். இதில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நரகாசூரன் படத்திற்கு பிறகு மீண்டும் அரவிந்த்சாமி உடன் கார்த்திக் நரேன் இணைய உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.