கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' வெளியாகி இருக்கும் நிலையில் ஜோதிகா அடுத்து நடிக்கும் புதிய படத்தை தொடங்கிவிட்டனர். 'சகுனி', 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' 'NGK' ஆகிய படங்களை தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் 21-வது தயாரிப்பாக உருவாக இருக்கும் படம் இது.
அறிமுக இயக்குனர் S.ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' வரிசையில் இந்தப்படமும் கதாநாயகி ஜோதிகாவை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாம். இந்தப் படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் நடிப்பதற்கு ஜோதிகாவுக்கு 1.5 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காற்றின் மொழி படத்தில் நடிப்பதற்கு ஜோதிகாவுக்கு 1.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இப்படத்திற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் 'ஸ்கூல்' செட் ஒன்றை சென்னையில் அமைத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த செட்டில் பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. படத்தில் ஜோதிகா டீச்சராக நடிக்கிறார்.