பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களான பா.ரஞ்சித், கோபி நயினார் ஒரே சமயத்தில் பழங்குடியின மக்களுக்காகப் போராடிய பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக அறிவித்தனர். இருவரும் ஒருவரைப் பற்றிய படத்தை ஒரே சமயத்தில் எடுக்கப் போவதாக அறிவித்தது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியது.
கோபி நயினாரின் 'கருப்பர் நகரம்' படம்தான் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'மெட்ராஸ்' படமாக உருமாறியது என்ற சர்ச்சை இன்னும் முற்றுப் பெறாமல் இருக்கிறது. இருப்பினும் பிர்சா முண்டா படம் பற்றிய சர்ச்சைக்கு கோபி நயினாரால் முற்றுப் புள்ளி வைக்க ஆசைப்படுகிறார். பிர்சா பற்றிய படத்தை ஒரே சமயத்தில் இருவர் மட்டும் எடுத்தால் போதாவது இன்னும் பலரும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே பிர்சா முண்டா பற்றி இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து ரஞ்சித்தும், கோபியும் எப்படி மாறுபட்டு அவர்களது படங்களைக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.