கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சினமாவில் இரண்டாவது ஆட்டத்தை தொடங்கி உள்ள நடிகை ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் நவ., 16-ல் காற்றின் மொழி ரிலீஸாகிறது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தனது அடுத்தப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, ராஜ் என்கிற புதியவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று(நவ., 14) பூஜையுடன் ஆரம்பமானது. ஜோதிகா, சிவகுமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகா, பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். டீச்சர் வேடம் ஜோதிகாவிற்கு புதிதல்ல, ஏற்கனவே சூர்யாவின் காக்க காக்க படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப்படத்தை விட இந்தப்படத்தில் இவரது கேரக்டர் வலுவானதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.