ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை நிக்கி கல்ராணி அறிமுகமானது '1983' என்கிற மலையாளப்படத்தில் தான் என்பதால், அவர் இப்போதுவரை மலையாள நடிகையாகவே தான் பார்க்கப்பட்டு வருகிறார். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலையாளத்தில் நடித்து வந்த நிக்கி கல்ராணி, தனது முழு கவனத்தையும் தமிழ் திரையுலகில் தான் செலுத்தி வந்தார்.
இந்தநிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார்.. இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார்.