'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'நடிகர் விஜய்யுடன் இரு படங்களில் இணைந்து நடித்து விட்டேன்; அடுத்ததாக, நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய இப்போதைய விருப்பம்' என, நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது : சாவித்திரி கேரக்டரில் நான் சிறப்பாக நடித்ததால், அதே போன்றதொரு கேரக்டரில் மீண்டும் நடிப்பீர்களா என்றே பலரும் கேட்கின்றனர். அப்படி கேட்பது எனக்கு பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று எப்படித்தான் கேட்கிறார்களோ? ஆனாலும், சாவித்திரி கேரக்டரில் நான் நடித்தது எனக்கு நல்ல அனுபவத்தையும்; மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சாவித்திரி கேரக்டரில் நான் நடித்தது மேஜிக்.
முழுக்க முழுக்க கதையம்சம் உள்ள படங்களில் படங்களில் மட்டுமே நடிக்க முடியாது. கமர்சியல் படங்களிலும் நடிக்க வேண்டும். நடிக்க வந்ததில் இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். அதனால், சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். வயலின் கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது வரை இருபது படங்களுக்கான கதைகளை கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு மீண்டும் வேகம் எடுப்பேன். தமிழில் நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து விட்டேன்; நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.