டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தொடர்ச்சியாக நடித்து வந்தார். தமிழில், கடைசியாக சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார்.
கடந்தாண்டு, முஸ்தபா ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி, திருமணத்திற்கு முன்பே நடித்து வந்த ஒரு மலையாள படத்தில் திருமணம் முடிந்த 2வது வாரத்திலேயே கலந்து கொண்டு நடித்தார்.
அதையடுத்து புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பிரியாமணி, தற்போது தெலுங்கில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை பிரகாஷ் புலிஜெலா என்ற புதுமுகம் இயக்குகிறார்.