மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தெலுங்கில் பாகுபலி போன்று, தமிழில் 2.0 போன்று, மலையாளத்தில் காயங்குளம் கொச்சுண்ணி போன்று கன்னடத்தில் உருவாகி உள்ள பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எப். 80 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள முதல் கன்னடப் படம். இது ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இதனை ஹம்பிள் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிர்கந்தூர் தயாரித்துள்ளார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, வசிஸ்டா என்.சிம்கா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்சுர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். பல விருகளை பெற்ற உகரம் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். டிசம்பர் 21ந் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் விஷால் வாங்கி வெளியிடுகிறார். இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது.
விழாவில் விஷால் பேசியதாவது: கன்னட சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் படம் தயாராக தொடங்கி உள்ளது. இது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. இந்தப் படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். பாகுபலி உலக அளவில் சாதனை படைத்தது போன்று இந்தப் படமும் சானை படைக்கும் என்று நம்புகிறேன். என்றார்.