டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெட்ராஸ் என்டர்டெயின்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நந்தகோபால் தான் தயாரித்த கத்திச் சண்டை படத்திற்கு விஷாலுக்கும், வீரசிவாஜி படத்திற்கு விக்ரம் பிரபுவுக்கும், 96 படத்திற்கு விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும், இதனால் அவருக்கு சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்த நந்தகோபால், தான் யாருக்கும் சம்பளபாக்கி வைக்கவில்லை. அனைவருக்கும் முழுசம்பளத்தையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி ஒன்று வந்துள்ளது. இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருகிறேன். நான் தயாரித்த 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கி விட்டேன். கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே விஷாலுக்கு பணம் செட்டில் செய்யப்பட்டு விட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உரிய முடிவை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கிற எந்த முடிவுக்கும் தயாராக இருக்கிறேன். தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல், காலம் தாழ்த்தினால் நான் டில்லியில் உள்ள காம்படிசன் கமிஷன் என்கிற அமைப்பின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.