வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தனது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் பெற்றுத்தந்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 'பாகுபலி-2' படம் வெளியாகி சுமார் ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் தனது புதிய படத்தை துவங்காமல் அமைதியாக இருந்து வந்தார் ராஜமவுலி.
அதேசமயம் ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து படம் இயக்கவுள்ளதாக தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதமே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார் இயக்குனர் ராஜமவுலி. ஒருவழியாக இதோ தனது புதிய படத்திற்கு இன்று பிரமாண்டமாக பூஜையும் போட்டுவிட்டார்.