விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
அடிக்கடி பாலியல் புகார் கூறியும், நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்புகிறவர் ராதிகா ஆப்தே. தமிழ் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாக தெரிவித்தார். தமிழில் டோனி படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்தார், வெற்றிச் செல்வன் படத்தில் அஜ்மலுடன் நடித்தார். ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தியுடன் நடித்தார். இவர்களில் யாரை அவர் சொன்னார் என்று தெரியவில்லை. புகாருக்கு பிறகுதான் கபாலி படத்தில் நடித்தார்.
இப்போது யார் என்று பெயரையும், படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கூறியிருப்பதாவது:
தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். தனது புதிய படத்தில் நடிப்பவர்களுக்கான ஆடிஷன் நடப்பதால், அதில் பங்கேற்கும்படி என்னை அழைத்தார். . இயக்குனரின் அழைப்பை ஏற்று ஓட்டலுக்கு சென்றேன். அது மிகவும் அழுக்கடைந்த ஓட்டலாக இருந்தது. ஒரு அறையில் 12 பேருடன் இயக்குனர் அமர்ந்திருந்தார். உள்ளே சென்ற என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்துகொள்ள சொன்னார்.
பிறகு ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. என்றாலும், விரைவில் ஆடிஷன் முடிந்துவிடும் என்று நினைத்து காத்திருந்தேன். பிறகு அந்த இயக்குனர் என்னை நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார். அவர் தன் படத்துக்காகத்தான் ஆடிஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டால் போதும் என்று முடிவு செய்து, எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.