விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. இதில் அரசை விமர்சிக்கும் காட்சிகளுக்கு, ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. சர்கார் ஓடும் தியேட்டர் முன் ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படத்தின் சில காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மறு தணிக்கையில் 3 காட்சிகள் நீக்கப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
'சர்கார்' திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கு, திரைப்படம் காண வரும் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.