ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த சர்கார் படம், கடும் சர்ச்சைகளை சந்தித்து வந்தன. நேற்று, ஆளும் அரசை படத்தை எதிர்த்ததால் பல ஊர்களில் படங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, நண்பகல் முதல் படம் மீண்டும் பிரச்னையின்றி திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்கார் சர்ச்சைகளில் வரலட்சுமி ஏற்று நடித்த கோமளவல்லி கதாபாத்திரமும் ஒன்று. தற்போது அந்த பெயர் வரும் இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. சர்கார் படத்திற்கு எழுந்த சர்ச்சை குறித்து வரலட்சுமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
"ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது. உங்கள் பெயரை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். தயவு செய்து இந்தமாதிரியான முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்" என பதிவிட்டிருக்கிறார்.
சர்கார் பட பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : எங்கள் உணர்வுகளையும், உரிமைகளையும் வன்முறை மூலம் ஒடுக்கிவிட முடியும் என நினைப்பவர்களுக்கு முதலில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விடுகிறேன். ஒரு குரலை அடக்கினால் கர்ஜனையை கேட்க செய்வோம். நீங்கள் தணிக்கை துறையை மூடிவிடுங்கள், நாங்கள் புரொமோஷன் துறையை மூடிவிடுகிறோம். இது முட்டாள்தனமானது, நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார்.