தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள சர்கார் படத்தில் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னையை பெருசுபடுத்த விரும்பாத சர்கார் படக்குழு, அதிருப்திகரமான காட்சிகளை நீக்கியுள்ளது.
இருப்பினும், சர்கார் படத்துக்கு திரையுலகினர் ரஜினி, கமல் உள்பட பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள். அதுகுறித்து குஷ்புவும் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால், "தமிழக அரசு மக்கள் மீது தனது அதிகாரத்தை திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்குதெல்லாம் புதிதல்ல. இதையெல்லாம் பல விஜய் படங்கள் வெளியாகும்போது பார்த்து விட்டோம். அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றி விட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக" என்று பதிவிட்டுள்ளார்.