ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள சர்கார் படத்தில் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னையை பெருசுபடுத்த விரும்பாத சர்கார் படக்குழு, அதிருப்திகரமான காட்சிகளை நீக்கியுள்ளது.
இருப்பினும், சர்கார் படத்துக்கு திரையுலகினர் ரஜினி, கமல் உள்பட பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள். அதுகுறித்து குஷ்புவும் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால், "தமிழக அரசு மக்கள் மீது தனது அதிகாரத்தை திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்குதெல்லாம் புதிதல்ல. இதையெல்லாம் பல விஜய் படங்கள் வெளியாகும்போது பார்த்து விட்டோம். அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றி விட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக" என்று பதிவிட்டுள்ளார்.