ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள சர்கார் படத்தில் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னையை பெருசுபடுத்த விரும்பாத சர்கார் படக்குழு, அதிருப்திகரமான காட்சிகளை நீக்கியுள்ளது.
இருப்பினும், சர்கார் படத்துக்கு திரையுலகினர் ரஜினி, கமல் உள்பட பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள். அதுகுறித்து குஷ்புவும் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால், "தமிழக அரசு மக்கள் மீது தனது அதிகாரத்தை திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்குதெல்லாம் புதிதல்ல. இதையெல்லாம் பல விஜய் படங்கள் வெளியாகும்போது பார்த்து விட்டோம். அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றி விட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக" என்று பதிவிட்டுள்ளார்.