ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருநாள்கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ், அதையடுத்து திமிரு புடிச்சவன், பார்ட்டி, பொன்மாணிக்கவேல் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் நிவேதா பெத்துராஜ், முதன்முதலாக என்னை நம்பி வெயிட்டான வேடம் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் போலீஸ் உடையணிந்து நடித்தபோது ரொம்ப சிரமமாக இருந்தது. நாள் முழுக்க எப்படித்தான் காவல்துறையினர் இந்த உடையை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். அந்த அளவுக்கு நடக்கும்போது, குதிக்கும்போது, குனியும்போது என கஷ்டமாக இருந்தது.
அதோடு, இந்த படத்தில் நான் சென்னை லோக்கல் தமிழ் பேசி நடித்துள்ளேன். முதல் இரண்டு நாட்கள் அப்படி நடிப்பது சிரமமாக இருந்தது. ஆனால் பின்னர் பழகிக்கொண்டேன். நான் நடித்துள்ள மடோனா கேரக்டராக முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு நடித்துள்ளேன்.
இந்த படத்தில் என்னை நம்பி வெயிட்டான ரோல் கொடுத்துள்ளார் இயக்குனர். எனக்கான டப்பிங் பேசியபோது, எனது நடிப்பைப்பார்த்து நானே சிரித்தேன். அந்த அளவுக்கு காமெடி காட்சிகளிலும் நான் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த கணேசா, நடிகர் விஜய் ஆண்டனி ஆகிய இருவருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்கிறார் நிவேதா பெத்துராஜ்.