ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் மெரீனா புரட்சி. இதனை எம்.எஸ்.ராஜ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் தணிக்கை சான்றிதழுக்காக கடந்த மாதம் தணிக்கை குழுவினர் படம் பார்த்தனர். படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்து விட்டது.
தயாரிப்பாளர் மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தார். நேற்று முன்தினம் படத்தை பார்த்த மறு தணிக்கை குழுவினரும் படத்திற்கு தணிக்கை சான்று தர மறுத்து விட்டனர். இதுகுறித்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:
இரண்டு முறை படத்தை பார்த்தும் தணிக்கை குழுவினர் சான்றிதழ் மறுத்து விட்டனர். இரண்டாவது முறை நடிகை கவுதமி தலைமையிலான குழுவினர் பார்த்தனர். படத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கான ஆதாரத்தை கொடுத்தேன். அதையும் வாங்க மறுத்து விட்டனர். என்ன காரணத்துக்காக தணிக்கை சான்றிதழ் தர மறுக்கப்படுகிறது என்பதையும் சொல்ல மறுக்கிறார்கள்.
நான் படத்தை டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறேன். ஆனால் அதற்கும் வழிவிடாமல் இரண்டாவது ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி இருக்கிறார்கள். இதனால் படம் இன்னும் தாமதம் ஆகும். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் தயாராகி உள்ளது. அந்த சம்பவங்களின் ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனால் நான் நீதிமன்றம் வரை சென்று போராடுவேன். என்கிறார் எம்.எஸ்.ராஜ்.