டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் திலீப். கடத்தல் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஒன்று ஜெர்மனியில் வருகிற டிசம்பர் 15ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடக்கிறது. அதற்கு வெளிநாடு செல்ல வசதியாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க போலீசுக்கு உத்தர விடவேண்டும் என்று திலீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "வழக்கை தாமதம் செய்யும் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வது சாட்சிகளை கலைப்பதற்காக இருக்கலாம்" என்றார்.
இதற்கு திலீப்பின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுவரை கோர்ட் விதித்த எந்த நிபந்தனையையும் திலீப் மீறவில்லை. போலீஸ் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகன் அவர். கோடி கணக்கில் அரசுக்கு வருமானவரி செலுத்துகிறார்" என்று வாதிட்டார்.