தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொண்ணூறுகளில் இருந்தது போல, சமீப வருடங்களாக வெளியாகும் படங்களில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை என்பது நிதர்சனம். முன்பெல்லாம் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் என்றால் விஜயசாந்தி, அவரை தொடர்ந்து வாணி விஸ்வநாத் ஆகியோர் தொடர்ந்து அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார்கள்.
தற்போது அந்த இடம் நடிகை பூர்ணாவுக்கு சென்றுவிட்டது போலத்தான் தெரிகிறது. காரணம் இந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டியுடன் போலீஸ் கேரக்டரில் பூர்ணா நடித்த 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து போலீஸ் கேரக்டர்களாக அவரை தேடி வருகின்றன.
அந்தவகையில் தற்போது விமல் நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு' மற்றும் 'புளூவேல்' ஆகிய படங்களிலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் பூர்ணா. கொடிவீரன் படத்திற்காக அவர் மொட்டையடித்து, அதன்பின் பாப் கட்டிங் அளவுக்கு முடி வளர்ந்திருந்தது. தற்போது இதே கெட்டப்பில் தான் அனைத்து போலீஸ் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் பூர்ணா.