டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தொண்ணூறுகளில் இருந்தது போல, சமீப வருடங்களாக வெளியாகும் படங்களில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை என்பது நிதர்சனம். முன்பெல்லாம் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் என்றால் விஜயசாந்தி, அவரை தொடர்ந்து வாணி விஸ்வநாத் ஆகியோர் தொடர்ந்து அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார்கள்.
தற்போது அந்த இடம் நடிகை பூர்ணாவுக்கு சென்றுவிட்டது போலத்தான் தெரிகிறது. காரணம் இந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டியுடன் போலீஸ் கேரக்டரில் பூர்ணா நடித்த 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து போலீஸ் கேரக்டர்களாக அவரை தேடி வருகின்றன.
அந்தவகையில் தற்போது விமல் நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு' மற்றும் 'புளூவேல்' ஆகிய படங்களிலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் பூர்ணா. கொடிவீரன் படத்திற்காக அவர் மொட்டையடித்து, அதன்பின் பாப் கட்டிங் அளவுக்கு முடி வளர்ந்திருந்தது. தற்போது இதே கெட்டப்பில் தான் அனைத்து போலீஸ் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் பூர்ணா.