இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் நம்பர் ஒன் குணச்சித்திர நடிகையாக வலம்வரும் சரண்யா பொன்வண்ணன் தனது சொந்த மொழியான மலையாளத்தில் எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் 'ஒரு குப்ரசித பையன்'. டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவரது அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.
இதில் செம்பம்மாள் என்கிற தமிழ் பெண்ணாகவே இவர் நடித்துள்ளதால் படத்தில் இவர் பேசுவது முழுவதும் தமிழ் வசனங்கள் தானாம். எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்திலாவது மலையாளத்தில் பேசலாம் என ஆவலாக இருந்தவருக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான் என்றாலும், தமிழில் அவருக்கு வழங்கப்படுவது போல இந்தப்படத்திலும் அழுத்தமான கேரக்டரை கொடுத்துள்ளார்களாம். இந்தப்படம் நாளை (நவ-9) ரிலீஸாகிறது.