தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன் 28. தீபாவளிக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான காவேரிப்பாக்கத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று சர்கார் படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள், அந்த பகுதிகளில் சர்கார் படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதில் அவர் வீடு அருகேயும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர்களை மணிகண்டன் கிழித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விஜய் ரசிகர்களிடமிருந்து மீட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். சற்றுநேரத்தில் அந்த அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதையடுத்து அவரது உடம்பை கைப்பற்றிய போலீசார், மணிகண்டன் தானாக தூக்கில் தொங்கினாரா? இல்லை கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.