ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன் 28. தீபாவளிக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான காவேரிப்பாக்கத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று சர்கார் படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள், அந்த பகுதிகளில் சர்கார் படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதில் அவர் வீடு அருகேயும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர்களை மணிகண்டன் கிழித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விஜய் ரசிகர்களிடமிருந்து மீட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். சற்றுநேரத்தில் அந்த அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதையடுத்து அவரது உடம்பை கைப்பற்றிய போலீசார், மணிகண்டன் தானாக தூக்கில் தொங்கினாரா? இல்லை கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.